Friday, November 12, 2010

Buffet - 12/11/2010 (13+)

இன்னிக்குத்தான் வ படம் பார்த்தேன் (குவாட்டர் கட்டிங்ன்னு போட்டதை தூக்கிட்டாங்களாம் - உண்மையா?). 


அந்த படத்துல வர்ற ஒரு வசனத்துல சொல்ற மாதிரி "ஏண்டா எல்லாத்துலேயும் ஒரு மெசேஜ் தேடி அலையிறீங்க". இதுதான் படத்தோட ஒன் லைன். 


போனமா காசு குடுத்தமா பிரியாணி துன்னமா-ன்னு இல்லாமா. 
பிரியாணி எப்படி செஞ்சீங்க?, எத்தனை மணிக்கு செஞ்சீங்க? எந்த அடுப்புல செஞ்சீங்க? அப்படீன்னு ஒரு தீசிஸ் எழுதற மாதிரி ஆராய்ச்சி பண்ணாம இருந்தா பிரியாணி படம் நல்ல பொழுதுபோக்கு படம். 


எனக்கு இந்த படம் பாக்கும்போது மெயின் தீம் (குட்டியூண்டு) Harold and Kumar ஞாபகம் வந்தது. அதில் எனக்கு ரொம்ப பிடித்த காமெடி கீழே.




13+ போட்டதுக்கு இதில் இறுதியில் வரும் வசனத்துக்காக!
=========================================================

2009 மார்ச்ல போட்ட பரஸ்பர நிதி திட்டம் 217% வளர்ந்திருந்தது. ரொம்ப சந்தோசமா ஓபன் பண்ணி பார்த்தா, நான் டிவிடென்ட் மறுமுதலீடு செய்த  50.52. வட போச்சே!





Reinvestment06/03/2009HDFC TAXSAVER - DIVIDEND

50.52


11/11/2010
139.26217.6500%

===========================================================
தமிழ் வளர்ப்பு

என்னோட மூன்று வயது மகன் பள்ளியில் ஆங்கிலம் பேசி பேசி வீட்டிற்கு வந்தால் எங்களிடமும் ஆங்கிலத்திலேயே பேச ஆரம்பித்து தமிழை மறந்து விடுவானோன்னு பயந்து போனதன் விளைவு. நானும் தங்கமணியும் வாரத்தில் ஒரு நாள் எந்த ஆங்கில வார்த்தையும் இல்லாமல் எங்களுக்குள் பேசுவது என முடிவு பண்ணி இருக்கோம். #தமிழுக்கு மரியாதை


==========================================================
புதிதாக திருமணம் ஆகி அமெரிக்கா வந்து முதன் முதலாக அடுப்பை பார்க்கும் பெண்களின் நிலைமை ரொம்ப பரிதாபம். சமைக்க தெரியாமல் திண்டாடுபவர்களின் தோழன் அண்ணன் சஞ்சய் இருக்கிற வரைக்கும் பிரச்சினை இல்லை. சீர் செனத்தியோட சஞ்சய்யோட ரெண்டு மூணு ரெசிபி DVD -யும் கொடுத்து அனுப்புங்க மக்கா. http://www.vahrehvah.com


Thursday, November 11, 2010

என்னாங்கடா நடக்குது...

அமெரிக்க அரசாங்கத்து மேலயே வழக்கு போட்டது கூகுள். ரெண்டு மூணு வாரம் முன்னாடி. எதுக்குன்னா டெண்டர் (RFQ - Request for Quotation)  குடுக்கும்போது அவனுங்களுக்கு வேணுங்கற மென்பொருள் மைக்ரோசாப்ட் மத்த தயாரிப்போட ஒரு பகுதியா இருக்கணும்னு சொல்லி கேட்ருக்கானுங்க. கூகுள்க்கு கோவம் வந்து வரிஞ்சு முடிஞ்சுகிட்டு கோர்ட்க்கு போயிருக்கு.

கூகுள்னா அவ்வளவு இளக்காரமா போயிடிச்சாடான்னு குழாயடி சண்டை ரேஞ்சுக்கு வழக்கு நடந்துட்டு இருக்கு. அஞ்சா நெஞ்சன் எல்லாம் இங்க இல்ல போல. 

கிங் மேக்கரும் கிங்கும் சேர்ந்து ஒன்னரை லட்சம் கோடிக்கு மேல சுருட்டி வாயில உட்டப்பவே இங்க யாரும் கேட்கலை.


கண்ணு கூகுளு, நீங்காட்டியும் இங்க வந்து அந்த டெண்டேர்ல அப்ளை பண்ணி இருந்து இந்த மாதிரி கேசு கீசு போட்டிருந்தீன்னா,  அப்பாலிக்கா google.com -ன்னு டைப் செஞ்சா இதா கீழ இருக்குற மாதிரி மாறி இருக்கும்டி. சாக்கிரத சொல்லிப்ட்டேன்.
























Monday, October 18, 2010

ககக..போ - வால்பையன் ஸ்பெஷல்!

ககக...போ பற்றி செவுத்துல முட்டிக்கிற பதிவ படிக்க இங்க அம்பை வைத்து குத்தவும்!


மிக சமீபத்தில் வாலுடன் ஃபோனில் கம்மாடிட்டி மார்க்கெட் பத்தி சில சந்தேகங்கள் கேட்டுக்கிட்டு இருந்தேன்.

வால்: ஹலோ... சொல்லுங்க தல.
(அஜித் ரேஞ்சுக்கு நமக்கு "நடிக்கவும்" தெரியாது. அஜித் மாதிரி பேஸ் கூட தெரியாது. அப்புறம் ஏன் நம்ம வாலு எல்லோரையும் தல தல-ன்னு கூப்பிடுராரு. தறுதலயோட சுருக்கமா இருக்குமோ?)

நான்: கமாடிட்டி டிரேடிங் பத்தி கொஞ்சம் சந்தேகம்ங்க.

கொஞ்சம் கேள்வி எல்லாம் கேட்ட பின்னாடி, ஏதோ நம்ம குட்டியூண்டு அறிவுக்கு  கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்தது.

நான்: சரிங்க பேசும்போது அடிக்கடி "அய்யனார் ரிஸ்க், லாபம் கம்மி"ன்னு சொன்னீங்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைங்கறதனாலே அப்படி சொன்னீங்களே.

மறுமுனையில் ஒரே அமைதி. என்ன ஆச்சு வாலு திடீர்னு ஆஃப் ஆகிட்டாரேன்னு நான் நாலஞ்சு தடவ "ஹலோ ஹலோ" சொன்னேன். லைன் ஒருவேளை கட் ஆகிடுச்சான்னு பாக்கும்போது, வாலு பேசினார்.

வால்: தல என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே. நான் சொன்னது INR தல. அய்யனார் இல்ல.

சொல்லிட்டு, "அவசர வேலை இருக்கு தல, நான் அப்புறம் பேசறேன்"ன்னுட்டு ஃபோனை வெச்சுட்டார். ஒருவேளை டாஸ்மாக்க்கு வண்டி வுட்டுருப்பாரோ????.

Friday, October 8, 2010

அடிச்சு கூட கேப்பாங்க, சொல்லீராதீக

ஒருநாள் நானும் எனது நண்பனும் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தோம். நல்ல கூட்டம். எங்களோட பஸ் ஸ்டாப் வந்ததும், அடிச்சு பிடிச்சு ரெண்டு பேரும் வெளியே வந்தோம்.

கீழே வந்தவன், திடீர்னு திரும்பி, பஸ்சுல நடுவுல ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தவனை பார்த்து " டேய் பச்சை சட்டை! ஏண்டா, நீங்க எல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலை" என்று சொல்லிவிட்டு என்னையும் கூட்டிக்கிட்டு வேகமா நடந்தான். நான் திரும்பி பச்சை சட்டையை பார்த்தேன். பஸ்சில் இருக்கிற எல்லாரும் அவனை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு பாத்துகிட்டு இருந்தாங்க.

எனக்கு ஒன்னும் புரியாமல் "ஏண்டா மாப்ளை, நாமலே பஸ்சுல கடைசியில நின்னுகிட்டு இருந்தோம். அவன் யாருன்னும் தெரியாது. என்ன பண்ணினான்னும் தெரியாது. எதுக்குடா அவனை அப்படி திட்டிகிட்டு வந்தே?"ன்னேன்.

"ஒரு தைபூசத்துக்கு மச்சான், நான் பழனி போயிட்டு பஸ்சுல வந்துட்டு இருந்தேன். பொள்ளாச்சி பக்கம் வந்துகிட்டு இருக்கும்போது, இவன் அந்த பஸ் ஸ்டாப்புல நின்னுக்கிட்டு, தூங்கிட்டு இருந்த என்னை சத்தம் போட்டு கூப்பிட்டு 'மச்சான் எப்படி இருக்கீங்க? பிசினஸ் எல்லாம் எப்படி போகுது?' அப்படின்னான். எனக்கு ஒண்ணுமே புரியலைடா. நானும் ஒரு வாரமா குழம்பிகிட்டு இருந்தேன். யார்றா அவன் என்னைய பாத்து இப்படி விசாரிக்கிறான்னு ஒரே குழப்பமா இருந்துதுடா. ஆனா அதுக்கு அடுத்த வாரம்தான் நான் சூரியவம்சம் படம் பார்த்தேன். அன்னிக்கு எடுத்தாண்டா சபதம். இன்னிக்குதாண்டா கையில சிக்கினான்".

அந்த பச்சை சட்டைகாரன் நிலைமைய நெனச்சு பார்த்தேன். இப்போ பஸ்சுல அவனுக்கு என்ன ட்ரீட்மென்ட் கெடைசுட்டு இருக்கோன்னு.

டிஸ்கி: அந்த பச்சை சட்டைகாரனுக்கு தெரிஞ்சவங்க அல்லது பச்சை சட்டைகாரனே கூட உங்ககிட்ட யாரு என்னோட அந்த நண்பன்னு கேட்பாங்க நீங்க சொல்லீராதீக. அடிச்சுகூட கேப்பாங்க, சொல்லீராதீக! 

Sunday, August 22, 2010

Buffet - 23/08/2010

இந்த வாரம் எங்க போனாலும் பல்பு கூப்பிட்டு கூப்பிட்டு கொடுத்தாங்க. உதாரணத்துக்கு ஒண்ணு;


எனது மூன்று வயது பையன் காகிதத்தில் கிறுக்கி கிறுக்கி வெச்சிருந்தார். இதைப்பத்தி தங்கமணியிடம் கேட்டேன்.

"வைரமுத்து பையன் பாட்டு எழுதறான்" என சொல்லிப்போனாள்.


#############################################################################

அடுத்த வாரம் இங்கே நான் மகான் இல்லை போடுறாங்க. என்ன தமிழ் படம் போட்டாலும் போயிடறோம். மூன்று டாலருக்கு சுட சுட இட்லி விப்பாங்க.


#############################################################################


காலையில இருந்து கிட்ட தட்ட மூன்று மணி நேரம் செலவழித்து மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு பார்த்தால் இனிப்போ இனிப்பு. கால் மணி நேரமா அதை முன்னாடி வைத்து நியுட்டன் ஆப்பிள் பார்த்த மாதிரி எங்க தப்பு நடந்ததுன்னு மண்டையை பிச்சுகிட்டு இருந்தேன். 

தங்கமணி என்னை ஒரு ஜந்து மாதிரி பார்த்து "நீங்க பொறித்து எடுத்த பாத்திரத்தில்தான் இரண்டு நாள் முன்னாடி குளோப் ஜாமூன் சக்கரை பாகு செய்தேன். நீங்க அடுப்பில் வெக்கிரக்கு முன்னாடி அதை கழுவலையா" என்றாள். நான் மட்டன் வாங்க போன வாரம் 120 மைல் போனது ஞாபகம் வந்தது.

#############################################################################





Wednesday, August 18, 2010

பின்நவீனத்துவமும், மேவீயும்


மறுபடியும் தம்பி (டம்பி) மேவீ ... என்னோட மூளையை கசக்க வெச்சு ஒரு பதிவு எழுத தூண்டிட்டார்... அது என்னன்னா... பின்நவீனத்துவம்...பின்நவீனத்துவம்னு ஒரு பக்கா சப்ஜெக்ட்.

அட நாமளும் நாடு நாடா திரியறமே... இத பத்தி ஏதாவது எழுதுவோம்னு பாத்தா...

"நடுவுல நடுவுல மானே தேனே போட்டுக்கணும்"னு டயலாக் மட்டும்தான் வருது.

கைக்கு வந்தத எழுதிப்ட்டு, பிரிஞ்சிருந்தா நவீனத்துவம்... இல்ல அப்பாலீக்கா பின்னாடி வந்து பொடணீய தட்டி புரிய வெச்சா அத்ததான் "பின்நவீனத்துவம்"னு கூவராங்களோ? இன்னாமோ போ... சோக்கா புட்ச்சாங்க பேர. (என்ன மாயமோ தெரியல.. இத பத்தி பேசுனா மெட்ராஸ் தமிழ்தான் வருது, சும்மா அருவி மாதிரி...)

நமக்கு தெரிஞ்சதெல்லாம் பொட்டி தட்டி பொழப்பு ஓட்டுறது மட்டும்தான். அதனால படம் போட்டு பாகங்களை குறிக்கலாம்னு எனக்கு நானே முடிவை எடுத்துட்டேன். அப்படியே கொஞ்சம் கீழே பாருங்க...


|
|
|
|
|
|
|
|
|




இது கிளிப்... துணி எல்லாம் காய போடுவேமே... (இது இந்த ஆட்டத்துல இல்ல...)










இது பின்னூசி.. ஜஸ்ட மிஸ்... எனக்கு தெரிஞ்ச வரலாற்று கூற்றுப்படி, பாரசீகர்கள் படையெடுத்த காலத்துல இருந்து இது இருக்கு. அதனால இது வெறும் பின் மட்டும்தான்.
















என்ன ஒரு விந்தை. குண்டூசிய எடுத்து கொண்டை அலங்காரம் பண்ணி இருக்காங்க. ஒருவேளை இதுதான் பின்"நவீன"த்துவமோ?






மக்களே இதுக்கு கம்பெனி பொறுப்பு கெடையாது. இது என்னோட போன பதிவுல முழுக்க முழுக்க மேவீயின் பின்னூட்டத்தின் திட்டமிட்ட சதி. இந்த பதிவின் எல்லா நன்மை (சத்தியமா எதுவும் இல்லைன்னு தெரியும்) தீமைகளுக்கும் மேவீயை பாத்தியப்படுத்துகிறேன். இதையும் மீறி கும்மி அடித்துதான் தீருவேன் என்றால், ரெடி... ஸ்டார்ட்... மூஜிக்....


வலையுலகில் நானும் ஒரு.... ரௌடிதாங்க.. நம்புங்க.


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஜல்லி.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அம்மா அப்பா வெச்ச பேர ஏன் நாசம் பண்ணனும்னு உண்மையான பேர நல்ல காரியத்துக்கு(அப்படி ஏதாவது செஞ்சதா விவரம் தெரிஞ்ச நாளா ஞாபகம் இல்லை) மட்டும்தான் பயன்படுத்தறதா போன பொது கூட்டத்துல நமது தொண்டர்கள் ஒரு தீர்மானம் எடுத்துட்டாங்க.

அதனால, வலைப்பதிவை ஆரம்பித்தால் என்ன பேர் வெக்குரதுன்னு அப்படியே தெருவுல ஓரு "துண்டடி" சாமியார் கணக்கா போகும்போது, ஏதோ காலை தடுக்கி விட்டுச்சு. என்னன்னு எடுத்துபாத்தா, ரோட்லேர்ந்து பேர்ந்து வந்திருந்த ஒரு கல்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

காலு கை எல்லாம் வெக்கிலீங்க. அப்படியே தொபுக்கடீர்னு குதிச்சிட்டேன். ஆட்டைக்கு ரொம்ப ரொம்ப புதுசுங்கறதாலே பெருசா ஒன்னும் இல்லை.

4.
உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எந்திரன் படத்தின் எல்லா சீனிலேயும், நம்ம ப்ளாக் லிங்க் வர்ற மாதிரி ஒரு வியாபார டீலிங் நடந்துட்டு இருக்கு.

5.
வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அடுத்தவன் காச ஆட்டை போடுறத விட, சொந்த செலவில சூனியம் வெச்சிக்கிறது பெட்டர்னு "சாணக்கியன் சொல்" தத்துவம் இருக்கு. அதனால முடிஞ்சவரை சொந்த சரக்குதான். சைடு டிஷ் மட்டும் எங்கேயாவது லவட்டிக்கிட்டு வந்துடறதுன்னு ஒரு கொள்கை.

விளைவுன்னு பார்த்தா, அயல்நாட்டில் இருப்பதால் இன்னும் ஒன்னும் தெரியலை. அடுத்த தடவை ஊருக்கு போனா ஏர்போர்ட்-லேயே ஆட்டோ, சுமோ எல்லாம் நிக்குமோ என்னமோ.

6.
நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

மற்றவர்களின் பதிவை படித்துவிட்டு, காதல் பட கிளைமாக்ஸ்ல வர்ற பரத் மாதிரி தலைல நங்கு நங்குன்னு குட்டிகிட்டு ரெண்டு நாள் அலைஞ்சதால, சரி ரைட்டு பாசுன்னு ஒரு பழிவாங்குற எண்ணத்தில் நானும் கும்மி அடிக்க கெளம்பிட்டேன்.

7.
நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னு தமிழில், இன்னொன்னு ஆங்கிலத்தில் (இது என்னோட பர்சனல் பயோ-க்ராபி போட்டோ பதிவுகளுக்கு மட்டும்).

8.
மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

வலையுலகம் ஒரு கார்பரேஷன் கிரௌண்டு மாதிரி. யாருக்கு என்ன புடிக்குதோ வெளையாண்டுக்கலாம்கிரதால, யாரு மேலயும் கோவமோ பொறாமையோ கிடையாது.

9.
உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
நம்ம சித்ரா சகோதரியும், ராம்ஜீ அவர்களும். முதல் பதிவ தமிழிஷ்ல பிரபலமாக காரணமான முதல் அடி இவர்களின் பின்னூட்டமும் அறிவுரையும்

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

ஜல்லி அடிக்கனும், அடிச்சுகிட்டே இருக்கணும். இது ஆணி அறுவடை செய்ற காலமா இருக்கறதால, ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் இடைவெளி அதிகமா தோணும் (உங்க நல்லதுக்குன்னு சொன்னா கேட்கவா போறீங்க), இருந்தாலும் அப்ப அப்ப எங்களை மாதிரி புது ஆளுங்களையும் பதிவுலகுல லைட் அடிச்சு காமிங்க (அண்ணன் மாதவராஜ் மாதிரி).

Tuesday, August 3, 2010

நான் கடத்தப்பட்டேனா? - (ஜல்லி)

தலைப்பிற்க்கான பதில் கடைசியில்....


என்னோட டீம் டேமேஜெர் மும்முரமா ஏதோ வேலை செஞ்சுகிட்டு இருந்தார். நாமதான் எப்பவுமே வம்பிழுத்தான்பட்டி கவுன்சிலர் மாதிரி எவன்கிட்டயாவது பேச்சு கொடுப்போமே... டேமேஜெர்கிட்டே சும்மா பேச்சு கொடுப்போம்ன்னு போனேன்.

மனுஷன் அப்பத்தான் அவரோட டேமேஜெர்கிட்ட முக்காடு போட்டு அடி வாங்கி இருப்பாரு போல (எல்லார் முன்னாடியும் திட்டு வாங்கினா... அதுக்கு பேரு "வூடு கட்றது", அதாவது... நாம திட்டு வாங்கறது ஊருக்கே தெரியும்).

முக்காடு விஷயம் எனக்கு தெரியாது. நான் எப்பவும் போல ,

"என்ன சார், எப்படி இருக்கீங்க"

"நான் ரொம்ப நல்லா இருக்கேன், சொல்லுப்பா"

"இல்ல சார் எனக்கு ஒரு சந்தேகம்..." (ஆங்கிலத்தில் பேசியதால், விவேக்கோட மாடுலேஷன் குரலுக்கு தர முடியலை).

"சொல்லுப்பா.. எதுன்னாலும் தயங்காம கேளு"

"இது எல்லாம் எவ்ளோக்கு வாங்கினீங்க... எந்த கடையில வாங்கினீங்க... நானும் இந்தியா போகும்போது என் பேர போட்டு ஒரு ஏழு, எட்டு வாங்கிட்டு போகணும், அதுக்குதான்...."

நான் கேட்டது எதப்பாத்துன்னா.....







- அந்த ஆளு 12 வருசமா ராத்திரி பகலுமா வேலை செஞ்சு ஒவ்வொரு அரையாண்டு முடிவுலயும், என்னடா இந்த ஆளு இப்பிடி கம்பெனிக்காக நாய் மாதிரி (நெசமாவே, ஒரு பேச்சுக்குதாங்க நாய்ன்னு சொன்னேன்) உழைக்கிறான்னு, விருது மேல விருதா எல்லா லெவல்ல இருந்தும் கொடுத்திருக்கிறத பாத்து -

அவமான படுத்தினா எந்த ஊர்காரனா இருந்தாலும் பழிவாங்குவான்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுது.

நம்ம ஊர் எஸ்.ஐ.க்கு வேண்டாத ஒருத்தன் சிக்கிட்டான்னா, சொம்பு தொலஞ்சு போன கேஸ்ல இருந்து... கஞ்சா கேஸ் வரைக்கும் போடுவாங்களே, அத மாதிரி.. டீம்ல இருக்கிற எல்லாரோட அடுத்த ரெண்டு மாச ஆணியையும் எங்கிட்ட குடுத்து, பத்து நாள்ல எல்லா ஆணியையும் புடுங்கி குடுத்துரு செல்லம் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாரு...

இப்ப புரிஞ்சுதா ரெண்டு வாரமா நான் ஏன் இந்த பக்கமே தலை...கால்.. கை.. முட்டி..மொகரை.. காட்டலேன்னு...

ஏண்டா திரும்பி வந்தேன்னு துப்புறவங்களுக்கு...ஒன் நிமிட் ஸ்டாப்....

.

.

.

.



"நான் தனி ஆள் இல்ல...
.
.
.
.
.
.

குடும்பஸ்தன்..."


பாசக்காரபயலுவ... ஓட்டு போட வேணாமுன்னு சொன்னா கேட்கவா போறீங்க...

Wednesday, July 28, 2010

ககக..போ (28/07/2010)

"அய்யா.. தங்களது மென்பொருளில் ஒரு பூச்சி உள்ளது.. நீங்கள் அதனை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். பிறகு மீண்டும் பூச்சி பிடிக்கும் துறைக்கு அனுப்பினால், நாங்கள் அதனை மறு ஆய்வு செய்து, சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அதனை ஏற்று கொள்வோம்".

"Hey dude! what'r u talkin' about? whatz goin' on with you man!"

"ஐயோ...." என்று கத்தினேன்... அப்புறம்தான் தெரிஞ்சுது கனவுன்னு... அடங்கொக்க மக்கா.. ரெண்டு லைன் வசனத்துக்கே இப்படி இருக்கே... இன்னும் 5-6 வருசத்துல என்ன எல்லாம் நடக்க போகுதோ....

"இதுக்குதான் டேசன் பக்கத்துல வீடு வேணாம்.. வீடு வேணாம்னு சொன்னதுன்னு" நட்ட நாடு ராத்திரியில வூட்டுகாரம்மா திட்டவும்தான் எனக்கு உரைத்தது.

ஜூனியர் விகடன் படிச்சுட்டே அப்படியே தூங்கிட்டேன். கடைசியா படிச்சது, தமிழ் வழியில் பொறியியல் கல்வி.

அய்யா மக்களே.. நான் எந்த கட்சிய சேந்தவனும் இல்லை. புரட்சி பண்ணவும் இங்கே எழுதவில்லை. நான் அடி பட்டத அடுத்தவன் பட கூடாதுங்கிற ஒரு மனிதபிமானத்துல எழுதறேன். ஏத்துக்க முடியாதவங்க தயவு செஞ்சு இதை இக்னோர் பண்ணவும். ஏத்துக்க முடிஞ்சவங்க "ககக..போ".

நாம ஆங்கிலம் படிச்சுட்டு வந்தே இங்கே குப்பை கொட்ட முடியலை... (அட, குப்பை தொட்டியவே பாக்க முடியலைங்க). ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒரு "Design Review Meeting" - இதுக்கு தமிழ்ல என்னப்பா.. "வடிவமைப்பு சரி பார்த்தல் சந்திப்பு".

நான் எல்லா வெளக்கேன்னையும் புட்டு புட்டு வெச்சும், நேத்து என்கிட்டே வந்து ஒரு தமிழன் (என்னோட டீம்-ல இருக்குறவன்) கேட்குறான், "ஆமா, நான் உங்களை ஒண்ணு கேட்கனும்னு நெனச்சேன். Design Review Meeting அப்போ எதுக்கு எல்லாரையும் பீர் அடி.. பீர் அடி அப்படின்னு அடிக்கடி சொன்னீங்க. அடுத்தவாரம் கோ-லைவ் நீங்க என்னடான்னா இப்படி சொல்லிட்டு இருக்கீங்க".

அட பக்கி பயலே... இப்படின்னு நான் சொன்னதா எத்தனை பேரு கிட்ட சொன்னானோ... "அட மாப்ளை, அது நான் உங்களை எல்லாம் தெனம் உட்காந்து பீர் அடிக்க சொல்லலை. I said 'Be Ready'.

ஒரு தமிழனுக்கும் தமிழனுக்குமே இத்தனை பிரச்சினை. மக்களே நெனச்சி பாருங்க. "எங்கயோ போற காரே.. என் மேல வந்து ஏறே"-ங்கற கணக்கா, நாம போய்கிட்டு இருக்கோம்... - கண்டிப்பா தொடரும்...

டிஸ்கி: இதை ஒரு தொடர் பதிவா எழுதலாம்னு எண்ணம். கழக மக்களோ, அஞ்சாநெஞ்சன் விரும்பியோ இதை படித்தால் எனக்கு சொல்லவும்...



Saturday, July 24, 2010

சேவ் பண்ணுடா மகனே சேவ் பண்ணுடா...

சில சமயங்களில் யாரோ ஒருவரை திடீர் என எங்கயாவது பார்ப்போம்... காரணமே இல்லாமல் அவர் மேல் பற்றோ...வெறுப்போ வரும்... உடனே கொசுவர்த்தியை ரிவர்ஸ் அடிச்சீங்கன்னா...அப்போ தெரியும் என்ன காரணம்னு....

போன வாரம் வால்-மார்ட் வாசலில் ஷாப்பிங் முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தேன்... என்னை ஒரு கார் தாண்டி போகும்போது அதில் டிரைவர் சீட்டில் இருந்தவர் என்னை பார்த்தவர் திடீரென முறைத்து முறைத்து பார்த்துவிட்டு சென்றார்.

இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அந்த ஆளை பற்றியே நினைத்து ஏழு, எட்டு கொசுவர்த்தி தீர்ந்து போனது... எங்கேயோ இந்த ஆளுகிட்ட வம்பு இழுத்திருகோம்னு மட்டும் தெரிஞ்சுது...



இந்த ரெண்டும்தான் அதற்கான காரணங்கள்


சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு சின்ன பொட்டி தட்டுற பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஒன்றில் ஆணி பிடுங்கி கொண்டிருந்தேன். அந்த குடோன் (கம்பனின்னு சொன்னா மத்த கம்பெனிகாரங்க அடிக்க வந்துருவாங்க). அதன் ஓனர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவர் ஒரு வாரம்தான் இங்கே இருப்பார் என்று டேமேஜெர் சொல்லி இருந்தார்.

நானும் அந்த ஆளுகிட்டே எப்படியாவது நல்ல பேரு எடுத்து அவர் போவதற்குள் அவரே "ஜல்லி, நீயும் என்கூட வந்துரு"ன்னு சொல்லும்படி செய்து காட்டுறேன் பாருங்கடான்னு கூட இருந்த மக்கள்கிட்டே சவால் விட்டேன். (ஏதோ ஈரோடு பஸ் ஏத்திவிட போற மச்சான்.. வாங்க மாப்பிள்ளை வந்து ஊர்ல ரெண்டு நாள் இருந்துட்டு போங்கன்னு சொல்ற மாதிரி, அமெரிக்காவையும் நெனச்சிட்டேன்.)

அவர் வந்த நான்காவது நாள் சாயந்திரம் ஆறு மணிக்கு மேலாகியும் நம்ம ஓனர் அண்ணன் எங்களை எல்லாம் விடாம அவருக்கு பின்னாடி நிக்க வச்சுட்டு, டாகுமென்ட் ஒன்னு ரெடி பண்ணி கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குங்கிற கவலை எனக்கு. அப்போது டாகுமென்ட் டைப் அடித்து கொண்டிருந்தவர், எலியை எடுத்து சேவ் பட்டன் மேல் கிளிக் பண்ணினார். ஒரு முறை இரு முறை அல்ல.. கிட்ட தட்ட எட்டு முறை.... அவரை இம்ப்ரெஸ் பண்ணுவதாக நினைத்து கொண்டு நான் அவரிடம் "என்ன சார்.. நல்ல்...லா... சேவ் பண்ணுறீங்களா?" என்றேன். அப்ப அவரு கோவமா ஒரு லுக் விட்டாருங்க பாருங்க... சிவன் நெற்றி கண் திறக்கும் போது பார்த்த ஒரு அனுபவம்.

அந்த ஆளை அதுக்கு அப்புறம் இப்போதான் பார்த்தேன். அருகில் இருந்த நண்பனிடம் கேட்டேன்... "என்னடா மச்சான்.. இன்னுமா அந்த ஆள் என் மேல கோவமா இருப்பான்". நண்பன் சொன்னான் "அதில்லை மச்சி... இத்தனை வருசத்தில அந்த ஆளு எத்தனை டாகுமென்ட் சேவ் பண்ணியிருப்பான். அப்போ எல்லாம் உன் மூஞ்சி தாண்டா அவனுக்கு ஞாபகம் வந்திருக்கும். அந்த கோவத்துல தாண்டா உன்னை அப்படி பாத்திருப்பான். அவன் பொண்டாட்டி மூஞ்சிய கூட அவன் அவ்ளோ தடவை நெனச்சிருக்க மாட்டான்"

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், நம்மளையும் ஒருத்தன் இத்தனை வருஷம் நெனச்சுகிட்டு இருந்ததை நெனச்சு, ஒரே எமோஷனல் ஆகிருச்சு...

பாலும்...கோர்ட்ம்...




சில வருடங்களுக்கு முன்பு நான் பொட்டி தட்டி கொண்டிருந்த multi-national IT கம்பெனியில் நடந்தது. எங்க டீமுக்கு (6-7 பசங்க...3-4 பொண்ணுங்க) ட்ரைனிங் கொடுக்க ஆன்சைட்ல இருந்து ஒரு ஈயம் (அதாங்க Lead) வந்திருந்தார். Client எங்க எல்லாருக்கும் ட்ரைனிங் 2 வாரம் கொடுக்க சொல்லி அனுப்பி இருந்ததால், அவரும் கர்ம சிரத்தையாக இரவு பகலாக ஈயத்தை காய்ச்சி கொண்டிருந்தார்.

அன்று கடைசி நாள். எங்க ப்ராஜெக்ட்-ல அது மிக முக்கியமான டீம் என்பதாலும், அன்று ட்ரைனிங்-இன் கடைசி நாள் என்பதாலும்...அன்றைய கடைசி முப்பது நிமிட வகுப்புக்கு அந்த ப்ரொஜெக்டின் VP, சீனியர் VP, Senior Managers ஒரு ரெண்டு மூணு பேரு.. எல்லாரும் "இத்தனை நாளா இவன் என்னத்தை காய்ச்சி இருக்கான்னு பார்ப்போம்" என்ற சந்தேகத்துடன் வந்து அமர்ந்தார்கள்.

அவங்க வந்து உட்கார்ந்ததும், நம்ம ஈய பாண்டி டென்ஷன் ஆகிட்டாரு.. "எங்க அண்ணன் flight-லையே கம்பி புடிக்க மாட்டாரு"-ன்னு நாங்களும் அப்படியே ஈயத்தோட பேச்சை ரசிக்கிற மாதிரி (என்ன கொடுமை சரவணன் இது) உட்கார்ந்திருந்தோம்.

ஈயம் சொற்பொழிவை ஆத்த ஆரம்பிச்சிடுச்சு..."இது ரொம்ப முக்கியமான டூல்.. நீங்க எல்லாரும்..." அப்படின்னு ஆரம்பிச்சு "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடக்குது"ன்னு நாங்க எல்லாம் பாடாத குறைதான்...ஒரு பத்து நிமிஷம் கழிச்சு...

"உங்க எல்லாருக்கும் நான் ரெண்டு வாரம் ட்ரைனிங் கொடுத்திருக்கேன். இனிமே நீங்க தான் கஷ்டப்பட்டு மேல மேல கத்துக்கணும்" அப்படின்னுட்டு அந்த கடைசி வாக்கியத்தை விட்டாரு பாருங்க நம்ம ஈயம்... "Now, The court is in your ball".

Friday, July 23, 2010

முதல் பதிவை தமிலிஷ்-ல் "பிரபலமானவை" பகுதியில் சேர்த்த உங்களுக்கு.....



நன்றி! நன்றி!! நன்றி!!!

என் இனிய தமிழ் மக்களே.. தமிழ் தெரிஞ்ச தெலுங்கு மக்களே... தமிழ் தெரிஞ்ச மலையாள மக்களே... தமிழ் தெரிஞ்ச கன்னட மக்களே.. மற்றும் தமிழ் தெரிஞ்ச மற்ற எல்லாருக்கும்..

என்னோட கன்னி பதிவை முதல் நாளே "பிரபலமானவை" பகுதியில் சேர்த்த அன்பு நெஞ்சங்களுக்கு....நன்றி! நன்றி!! நன்றி!!!

என் வலை சேவை தொடர ஊக்குவித்த தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... (அடேய்... நீ போகலையா இன்னும்....அப்படின்னு நீங்க கேட்கிறது தெரியுது...)

நேற்று பூச்சி நெறைய இருந்ததால் இங்கே ஜல்லி அடிக்க முடியவில்லை... விரைவில்.. சரி சரி... இதோ கெளம்பிட்டேன்....



Thursday, July 22, 2010

4D - ஒரு அறிமுகம்

நிலம்
நீர்
காற்று...
சிமெண்ட் மரங்கள்
தூரத்தில் தெரியும் மேகங்கள் ....
யார் பற்ற வைத்தார் சூரிய அடுப்பு...?



ஹி....ஹி...திட்டுறவங்க மனசுக்குள்ள திட்டிக்குங்க....மத்தவங்க இந்த கன்னி சாமிக்கு ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க....

நானும்... தலைகாணியும்..பின்னே Air-Hostess-ம் - 2

இங்க எப்படி வந்து சேர்ந்தோம்ன்னு வழி தெரியாம முழிக்கறவங்க இங்க போய் ஒரு கடி வாங்கிட்டு வாங்க...

எப்படியோ ஒரு வழியா பிரஸ்ஸல்ஸ் வந்து சேர்ந்தேன். அந்த Air-Hostess ஏதாவது சாபம் விட்டிருப்பாளோன்னு ஒரு மாதிரி நூடுல்சோட விமானம் விட்டு இறங்கினேன். அங்க ஏர்போர்ட்ல பாதி பேர் பேய் அறைஞ்ச மாதிரியும்... மீதி பேர், காலைக்காட்சி, மேட்னி, ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ எல்லா நேரத்திலேயும் சுறா பாத்துட்டு வந்தவன் மாதிரியும் (அப்ப எல்லாரும் ஒரே மாதிரி இருந்தானுங்கன்னு சொல்றீங்களா...ரைட்டு) இருந்தானுங்க. இன்னோர் பாக்கெட் நூடுல்ஸ் தலைக்குள்ள போக...சரி என்னதான் நடக்குதுன்னு என்னோட சிகாகோ விமானம் கிளம்ப (என்னது கிளம்புமான்னு வடிவேலு வாய்ஸ்ல யாருங்க கேட்கிறது???) இருக்கிற கேட்-க்கு வந்தேன்.

என்னோட போர்டிங் பாஸ் குடுத்து அங்க கவுன்ட்டர்ல இருக்கிற வெள்ளைகார தொரைகிட்ட கேட்டேன். அவரு என்னை பார்த்து விட்ட லுக்ல... என்னமோ ஒரு அவதார் படத்துல வர்ற ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நெனைசுட்டாரோன்னு பார்த்தேன் (சாருக்கு இன்னொரு பாக்கெட் நூடுல்ஸ் பப்...பார்சல்!!!).

"உங்க விமானம் இன்னிக்கு போகாது... வேணுமின்னா நீங்க இங்கேயே இருக்கிற ஏதாவது சேர்ல சீட் புடிச்சு உட்காருங்க"-ன்னான் (இனிமே எதுக்கு "ன்னார்")

"ஏன் இன்னிக்கு போகாது?"

"இல்ல சார் ஐஸ்லேன்ட்ல எரிமலை வெடிச்சதுனால எல்லா விமானமும் ரத்து செய்துட்டோம்னான்"

அடப்பாவிகளா பத்தினி சாபம் இவ்ளோ சீக்கிரத்துல பலிக்குதுன்னு... தொடர்ந்து ரெண்டு நாள் சுறாவும் அசலும் மாத்தி மாத்தி பார்த்தவன் மாதிரி ஆகிட்டேன்.

சரி நூல் விட்டு பார்ப்போமுன்னு "சரி எனக்கு வேற ஏதாவது வழி சொல்லுங்க"ன்னு தமிழ் பட மொக்கை கதாநாயகி, கதாநாயகன்கிட்ட சொல்ற மாதிரி கேட்டேன். "நான் உங்களை லண்டன் விமானத்துல அனுப்பறேன். அங்க இருந்து நெறைய விமானம் US போகுது. அங்க போய் கேட்டீங்கன்னா குடுப்பங்க"ன்னான். சரி யாருமில்லாத கடையில டீ ஆத்தரதவிட, இது எவ்வளவோ மேல் அப்படின்னுகிட்டு.....
(But அவன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது).

லண்டன் மற்றும் US பற்றி விரைவில்....

மீண்டும் நாளை சந்திப்போமா (உபயம்: சாலமன் பாப்பையா).

நானும்... தலைகாணியும்..பின்னே Air-Hostess-ம் - 1


இரண்டு வருடங்களுக்கு அப்புறம் இந்தியா வந்திருந்தேன்... இருந்தது இரண்டு வாரம்தான் (அத வெச்சி ஒரு தனி மொக்கை போடுவோமில்லே)....

அடிக்க நெறைய பூச்சி (bug) பறந்துட்டு இருக்கு... ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சுன்னா, அப்படியே அங்கேயே ஏதாவது ஒரு பஸ் ஸ்டாண்ட்-ல உக்காந்து மொக்கை படங்களோட DVD விக்க பழகிகோன்னு டேமேஜெர் சொன்னது ஞாபகத்துக்கு வந்து தினமும் ஒனிடா பூதம் வேஷத்துல கனவுல வேற வர ஆரம்பிக்க...

சரியாய் 13-வது நாள் பொட்டியையும்... "பொட்டி"யையும்... கட்டிக்கிட்டு, நேரா கோயம்புத்தூர்-ல இருந்து சென்னை விமானம் பிடிச்சு, அக்கடான்னு விமானதுல வந்து உட்கார்ந்தேன்.

இங்கதான் விதி எனக்கு மட்டும் தெரியற மாதிரி கும்மி அடிச்சுக்கிட்டே என் மடியில வந்து உக்காந்துச்சு. விமானத்துல குடுத்த தலகாணிய மடியில வச்சுக்கிட்டு, சென்னை-ல தெரிஞ்ச நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டு மொபைல்-ஐ switch-off பண்ணினேன்.

விமானம் கிளம்ப 10 நிமிஷம் இருக்கும் போது எங்க இருந்தோ ஒரு Air-Hostess பொண்ணு என்னை பாத்து வந்தாள். வந்தவள், என்னை பார்த்து கேட்ட கேள்வி இருக்கே...

"உங்க தலகாணிய தூக்க முடியுமா? நான் பார்க்கணும்" - Can you please lift your pillow? I wanna see - என்றாள். நான் அப்படியே ஸ்டன் ஆயிட்டேன்.

இதென்னடா வம்பா போச்சின்னு "நீங்க எதுக்கு அங்க பாக்கணும்?" அப்படின்னு அப்பாவியா (நெசமாதாங்க) கேட்டேன்.

அப்ப பாத்து பக்கத்துல இருந்த பக்கி பய ரெண்டு பேரும் க்ளுக்னு சிரிச்சிட்டானுங்க (தக்காளி, வெச்சிக்கிறேன் இருங்கடி).

அந்த Air-Hostess அவனுங்க ரெண்டு பேரையும் பார்த்து ஒரு கோவமா லுக் விட்டுகிட்டே (சோத்துல விஷம் வெச்சி குடுக்கிறேன் இருங்கடா).

என்னை பார்த்து "ஹலோ மிஸ்டர்.. நீங்க பெல்ட் போட்டு இருக்கீங்களா-ன்னு செக் பண்ணனும், காமிங்க"-ன்னா.

ஆஹா... சும்மா போற எருமைய கூப்பிட்டு முதுகு சொரிஞ்சு விட சொல்லி "Service Request" குடுத்த மாதிரி பேந்த பேந்த முழிச்சுகிட்டே, தலகாணிய தூக்கி காண்பிச்சேன்.

அவ என்னை ஒரு மாதிரியே பாத்துகிட்டு அடுத்த தலகாணிய...இல்ல அடுத்த seat பார்க்க போயிட்டா. அதுக்கு அப்புறம் நான் சாப்பாடே சாப்பிடாம போனது வேற கதை.

ஸ்டாப்-ஓவர் பெல்ஜியம் "Brussels" airport. அங்க நடந்தது தனி கதை.. அடுத்த பதிவில் தொடரும்.

Wednesday, July 21, 2010

Buffet - 22/07/2010


சத்தத்தை அணைத்துவிட்டு முதல் தடவை பாருங்க. அப்புறம் ஆன் செய்துவிட்டு ஒரு தடவை பாருங்க.

(எல்லோரும் தைரியமாய் பார்க்கலாம்...)




டிஸ்கி: இந்த வீடியோதான் விஜயோட 2011 தேர்தல்ல தோல்விக்கு ஆரம்பம்னு நீங்க நெனைச்சா, அதுக்கு கம்பெனி பொறுப்பு கிடையாது.(வீடியோ எடிட் செய்தவர் வீட்டிற்கு ஆட்டோ மற்றும் சுமோ அனுப்ப பட்டதா என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை).

---------------------------------------------------

இயற்கைதான் தன்னுள் என்ன என்ன வைத்திருக்கிறது...(சரி சரி தள்ளி நின்னு துப்புங்க)


----------------------------------------------------
உட்காந்து யோசிங்கப்பு...

1. அனிலும் முகேஷும் ஒன்று சேர்ந்தார்கள். RNRL மூடப்படும்.
2. மாறன் சகோதர்களுக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் சண்டை (பழைய செய்தி). சன் டிவிக்கு போட்டியாக கலைஞர் டிவி அறிமுகம் (பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு!!!).

இதிலிருந்து தெரியறது என்னன்னா... சண்டை போடுங்க பொருளாதாரத்தை வளத்துங்க.






Related Posts with Thumbnails